Tuesday, 13 September 2011

மொழிகள் பிரிதலும்ஒன்றிணைதலும்


1. மொழிகள் பிரிதலும்ஒன்றிணைதலும்


Form
மொழிகள் பலவாகப் பிரிந்து போதல் கடந்த பல நூற்றாண்டுகளாக, நடைபெற்று வந்துள்ளது. அதனால் தாய்மொழிகளின் எண்ணிக்கையும்  பல மடங்காக அதிகரித்து விட்டன. தற்போது, மொழி பிரிந்து செல்லும் காலம் முடிந்து விட்டது. தற்போது ஏற்பட்டுள்ள தொழில் நுணுக்கம் உலகினை ஒரு சிறிய கிராமமாக ஆக்கிவிட்டதால், மொழிகள் ஒன்றிணையத்  தொடங்கிடும் காலம் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப  தாய்மொழிகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்திடும் காலமும் உருவாக வேண்டும். இந்திய / இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகள் யாவும் ஒரு குடும்ப மொழிகளாக இருப்பதால் அவைகள்  ஒருங்கிணைய வழிகோலுவதற்காக ஒரு பொது வரிவடிவம் தேவைப்படுகின்றது. 

அ. மொழிகளில் உள்ள நான்கு பிரிவுகள்

1) எழுத்துக்களை (எழுத்தொலிகளை அல்ல) அடிப்படையாகக் கொண்ட அதாவது உயிர், மெய் என்று இரண்டு வகையான எழுத்துக்கள் உள்ள மொழிகள். (உதாரணம் ஆங்கிலம்)

2) எழுத்தொலிகளை (எழுத்துக்களை அல்ல) அடிப்படையாகக் கொண்ட அதாவது உயிர், மெய் உயிர்மெய் என்று மூன்று வகையான எழுத்துக்கள் உள்ள மொழிகள். (உதாரணம் தமிழ்)

3) ஒலிகளை (எழுத்துக்களை அல்ல) அடிப்படையாகக் கொண்ட அதாவது உயிர், மெய் உயிர்மெய், கூட்டெழுத்து என்று நான்கு வகையான எழுத்துக்கள் உள்ள மொழிகள். (உதாரணம் இந்தி)  Bottom of Form

4) எழுத்துக்களோ ஒலிகளோ அடிப்படையாக இல்லாமல் கருத்துப் படங்களை (Ideographs)  எழுத்துக்களாகவோ சொற்களாகவோ கொண்ட மொழிகள். (உதாரணம் சீனம்)

ஆ. மொழிகள் ஒருங்கிணைதலின் முதல் கட்டம்

முதல் பிரிவில் உள்ள உலக மொழிகள் அனைத்தும் வரும் 10 நூற்றாண்டு காலக் கட்டத்திற்குள் ஒரு பொது வரி வடிவத்தினை, ஏற்கலாம். உதாரணமாக, லேடின் (Latin)  வரி வடிவத்தினை ஏற்கலாம்.  இரண்டாம் பிரிவில் உள்ள உலக மொழிகள் அனைத்தும் வரும் 10 நூற்றாண்டு காலக் கட்டத்திற்குள் ஏதாவது ஒரு பொது வரி வடிவத்தினை, ஏற்கலாம். உதாரணமாக, உயிர்மெய் எழுத்து தவிர வேறு கூட்டு எழுத்து இல்லாமல் இருப்பதால், தமிழ் வரி வடிவத்தினை ஏற்கலாம். மூன்றாம் பிரிவில் உள்ள உலக மொழிகள் அனைத்தும், வரும் 10 நூற்றாண்டு காலக் கட்டத்திற்குள், மொழிகளின் இரண்டாம் பிரிவில் உள்ள உலக மொழிகளோடு இணைந்து ஒரு பொது வரி வடிவத்தினை, ஏற்கலாம். உதாரணமாக, உயிர்மெய் எழுத்து தவிர வேறு கூட்டு எழுத்து இல்லாமல் இருப்பதால், தமிழ் வரி வடிவத்தினை ஏற்கலாம். நான்காம் பிரிவில் உள்ள உலக மொழிகள் அனைத்தும், வரும் 10 நூற்றாண்டு காலக் கட்டத்திற்குள், மொழிகளின் முதல் அல்லது இரண்டாம் பிரிவில் உள்ள உலக மொழிகளோடு இணைந்து ஒரு பொது வரி வடிவத்தினை, ஏற்கலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்ததாக இருப்பதால், இரண்டாம் பிரிவில் உள்ள மொழிகளை, வரும் 10 நூற்றாண்டு காலக் கட்டத்திற்குள், இணைந்து ஒரு பொது வரி வடிவத்தினை, ஏற்கலாம். உதாரணமாக, உயிர்மெய் எழுத்து தவிர வேறு கூட்டு எழுத்து இல்லாமல் இருப்பதால், தமிழ் வரி வடிவத்தினை ஏற்கலாம். இதனை மனதில் கொண்டு, கூட்டு எழுத்துக்களை அகற்றி அதற்குப் பதிலாக மாற்று எழுத்துக்களை கொடுப்பதற்காக, கூட்டு எழுத்துக்கள் இல்லாத தமிழ் பொது வரி வடிவத்தினை அனைத்து இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்திட முன் மொழியப்படுகின்றது.  

  இ. மொழிகள் ஒருங்கிணைதலின் இரண்டாம் கட்டம்

அ) தமிழ் எழுத்துக்களை சிறிது நேரம் மறந்துவிட்டு, உலகினைப் பார்க்கவும். உலகிங் நீங்கள் பார்ப்பதெல்லாம் கடவுளின் படைப்புகள். அவைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்



அவைகள்

1) ஒன்று முதல் ஆறு அறிவு உயிர்களைப் பெற்றுள்ள உடம்புகள்
2) நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்துடன் உயிரற்ற உடம்புகள்
3) பார்க்க இயலாத ஆனால் உணரக்கூடிய உயிர்கள்

இப்போது தமிழ் எழுத்துக்களைப் பார்த்தால், கீழ்க் காணும் பிரிவுகளைக் காணலாம். 

1. உயிர்மெய் எழுத்துக்கள் (உயிர்களைப் பெற்றுள்ள உடம்புகளைப் போன்றவை)
2. மெய் எழுத்துக்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத்துடன் உயிரற்ற உடம்புகளைப் போன்றவை)
3. உயிர் எழுத்துக்கள் (உயிர்களைப் போன்றவை)

உலகின் இயற்கைச் சூழலை தமிழ் உரையில் (text) உள்ள எழுத்துக்கள் பிரதிபலிப்பதை உணரலாம்.  

 ஆ) தமிழ்ச் சொற்களின், முதல் எழுத்து தவிர, வேறெங்கும், இடையில் உயிர் எழுத்துக்கள் இடம்பெறாது.

1. உயிர்கள் உடம்புடன்தான் உலகில் இயங்குகின்றன. அதுபோல், உயிர்மெய் எழுத்துக்கள் தமிழ் உரையில் இருக்கின்றன.
2. தமிழ் சொற்களில் முதலாவதாக உள்ள உயிர் எழுத்தினைக் கீழ்க் காணுமாறு கருதலாம்.

வலது பக்கம் உள்ள உயிர் எழுத்தினைச் சேர்த்துக் கொண்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன. அதனால், முதலாவதாக உள்ள உயிர் எழுத்துக்களுக்கு அதன் இடது பக்கம் மெய் எழுத்து இல்லாமையால் தனித்து இருக்கின்றது. இதனை, உலகில் உயிர் சேருவதற்கு உடம்பு எதுவும் இல்லாத உயிர்களை குறிப்பிடுவதாக கொள்ளலாம்.

இ) மெய் எழுத்து சொற்களில் முதல் எழுத்தாக இடம் பெறாது.

ஈ) ஒரு சொல்லில், அதே மெய் எழுத்து, அருகருகாக, அதாவது அடுத்து அடுத்து பக்கத்துக்குப் பக்கத்தில், அமையாது. ஆனால், சொற்களின் இடையில் எல்லா இடத்திலும்  இரண்டு வெவ்வேறு மெய் எழுத்துக்கள் மட்டும், அருகருகாக, அதாவது அடுத்து அடுத்து பக்கத்துக்குப் பக்கத்தில், அமைந்து வரும். எனினும், இரண்டிற்கு மேற்பட்ட மெய் எழுத்துக்கள் அருகருகாக, அதாவது அடுத்து அடுத்து பக்கத்துக்குப் பக்கத்தில், இடம் பெறாது.

உ) உயிர் எழுத்து ஒரே ஒரு மெய் எழுத்துடன்தான் இணைந்து வரும்.   
உலகில் உள்ள செம்மொழிகளில் ஒன்றாக உள்ள தமிழ் மொழிக்கு, இவைகள் எல்லாம்,  அடிப்படையான இயற்கை விதிகளாக உள்ளன.

எனவே, வரும் பத்து அல்லது இருபது நூற்றாண்டுகளில், நான்கு பிரிவுகளாக அமைந்துள்ள உலக மொழிகள் அனைத்தும் உயிர்மெய் எழுத்து, மெய் எழுத்து, உயிர் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துக்கள் உள்ள பொதுவான தமிழ் வரி வடிவமுள்ள மொழிகளாக ஒன்றிணைந்துவிடும் என்று  துணிந்து முன்கூட்டியே கூறலாம்.

2. இந்திய மொழிகளைக் கற்பதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும், நிர்வாக வசதிக்கும் உதவிட பொதுவான தமிழ் வரி வடிவம்

அனைத்து இந்திய மொழிகளுக்கும்  தமிழ் வரிவடிவத்தினைப் பொதுவான வரி வடிவமாகப் பின்பற்றுவது  மிகவும் பயனுள்ளது. இதனைப் புரிந்து கொள்ள, (1) மொழிகளின் வரலாறு (History of Languages) (2) மொழிகளின் குழுக்கள் (Language Family) (3) சொல் வரிசை (Word Order0 (4) மொழிகளின் வரி வடிவம் மற்றும் (5) துணைக்கண்டம் முழுவதும் வழக்கில் இருந்த பண்டைய இந்திய மொழி பற்றி முற்றிலும்  அறிவது அவசியம். பல்வேறு வரிவத்தினைப் பயன்படுத்தும் மொழிகளின் பட்டியலைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.


அ. வாக்கியங்கள்சொற்கள்  மற்றும்  எழுத்துக்களின் வளர்ச்சியடன் மொழிகளின் வரலாறு:

செம்மொழி என்று அமைக்கப்படும் தமிழ், கிரேக்கம், சீனம், ஜப்பான் போன்ற மொழிகள் மூல மொழிகளாக இருந்தன. இவற்றில் இருந்துதான் பல மொழிகள் பிரிந்து சென்றன.

மனிதன் முதன்முதலாக பேசத் தொடங்கிய போது, முழுமுழு வாக்கியமாக (சொற்கள், எழுத்துக்கள் இல்லாத ஒலித் தொகுதியாக) பேசத் தொடங்கினான். வாக்கியத்தினை உடைத்து 9எழுத்துக்கள் இல்லாத) சொற்களை உருவாக்கி ஒன்றிணைத்து சொற்தொடராக மனிதன் பேசிடுவதற்கு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. (இந்த நிலையில், சில மொழிகளில், உதாரணமாக சீனமொழியில், இலக்கியங்கள் உருவாகி நிலைபெற்று விட்டதால்,  சொற்களை எழுத்துக்களாக பிரிக்கும் நிலையை எட்ட இயலாமல் போய்விட்டது. இது போன்ற மொழிகளுக்கு சொற்களே எழுத்துக்களாக அமைந்துவிட்டன.) எழுத்தொலிகளைச் சேர்த்து  சொற்களாகவும் வாக்கியமாகவும் ஒன்றிணைத்து மனிதன் பேசிடும் நிலை ஏற்படுவதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. அதன் பிறகு, உலக இயற்கையோடு ஒத்த வகையில் மனிதன் எழுத்துக்களை உயிர் என்றும் மெய் என்றும் உயிர்மெய் என்றும் வகைப்படுத்தினான். தனித்தனிச் சொற்களை பெயர் என்றும் பெயரடை என்றும், வினை என்றும், வினையடை என்றும் உறுபுகள் என்றும் வாக்கியத்தில் பயன்படுத்துகையில் அவற்றை எழுவாய் என்றும், பயனிலை என்றும் செயப்படு பொருள் என்றும் நுணுக்கமாக வகைப்படுத்தினான். இவைகள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டன. தற்போது இதையெல்லாம் யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

ஆ. மொழியின் வாக்கியங்களில் அமையும் சொல்வரிசைகள்:

சொல் வரிசை (word Order) எனப்படும் சொற்களின் முறை அமைjப்பைக் கொண்டுதான்  மொழியின் வாக்கியங்களில் கூறப்பட்ட பொருட்களை புரிந்துகொள்ள இயலுகின்றது. சொல் வரிசை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மொழிகளின் குடும்பங்களைக் கண்டறிந்து தொகுக்கப்பட்டுள்ளன. மொழிகளில் சொல் வரிசை அமைப்புகள் முக்கியமாக மூன்று வகைகளில் அமைந்துள்ளன. அவைகள்.:

(1) வாக்கியத்தின் கடைசியில் வினைத்தொடர் (verb last) அதாவது எழுவாய் செயப்படுபொருள்வினை (subject – Object – Verb) (அ) செயப்படுபொருள்- எழுவாய்- வினை (Object – Subject – Verb)
(2) வாக்கியத்தின் மையத்தில் வினைத்தொடர் (Verb in between) அதாவது எழுவாய்-வினை-செயப்படுபொருள் (subject – Verb – Object) (அ) செயப்படுபொருள்- வினை- எழுவாய் (Object – Verb – subject)
(3) வாக்கியத்தின் ஆரம்பத்தில் வினைத்தொடர் (Verb first) அதாவது வினை-எழுவாய்- செயப்படுபொருள் (Verb – subject – object)  (அ) வினை-செயப்படுபொருள்-எழுவாய்  (verb – object – subject)

இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து மொழிகளும் முதல் வகையில் உள்ளன.  ஆங்கிலம், சீனம் உட்பட மேற்கு நாட்டு மொழிகள் (அ) ஆரிய மொழிகள் ஆகிய அனைத்து மொழிகளும் இரண்டாவது வகையில் உள்ளன. மிகச்சில மொழிகள் மட்டும் மூன்றாவது வகையில் உள்ளன. மொழியின் ஒவ்வொரு வகையிலும் மற்ற இரண்டு வகைகளும் சிறிது கலந்தும் உள்ளன. சமஸ்கிருதம் இயற்கை மொழி அல்ல. இந்திய எழுத்துருவைக் கொண்டு அறிவில் சிறந்த மக்களால் நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காக இந்த மொழி உருவாக்கப்பட்து. . அதனால் இந்த மொழியில் தரப்படுத்திய சொல் வரிசசை அமையவில்லை.
இ. துணை கண்டத்தின் பண்டையமொழி தமிழ் மொழி,:

மிகப் பழங்காலத்தில் அனைத்து இந்திய துணைகண்டம் முழுவதும்  (அதாவது, இந்திய, ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான், வங்காளம், மியான்மர், மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய)  பண்டைய தமிழ் மொழி (காண்க ஹரப்பா, மொகான்சோதாரோ கல்வெட்டுகள்) பேசப்பட்டு வழக்கில் இருந்து வந்தது. இந்தப் பரந்த நிலத்தினைப் பற்பல சிறு சிறு அரசுகளாக ஆட்சி செலுத்தி வந்தன. சில சாதுர்யமான ஆரியர்கள் இந்திய துணை கண்டத்தில், ஊடுருவி  அப்போதிருந்த அரசுகளில் உயர் பதவிகளைப் பெற்று சமூகத்தின் ஆளும் நிலையை பெற்றதால், ஆரிய மொழி ஆதிக்கம் பெற்றது. (இதற்கு சமீபத்திய உதாரணம் ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் மக்கள் மீது ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது எனலாம்).

மிகப்பழங்காலத்தில், எ () என்கின்ற குறில் உயிரும் () என்கின்ற குறில் உயரும்  “ () “ () என்கின்ற உயிர் மெய் எழுத்துக்களும் பண்டைய தமிழ் மொழியில், தோன்றாத போது, ஆரிய கலாசாரம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. பண்டைத் தமிழ் சொற்கள் வழங்கிய இடங்களில் ஆரியச் சொற்கள் பெருமளவில் தொடர்ந்து கலந்து வந்தன. வழக்கில் இருந்த மொழிக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லாததால் பாலி, பிராகிருதம் முதலிய பல மொழிகளாகத் திரிபடைந்தன.  பண்டையத் தமிழ் மொழி ஆரிய மொழியோடு கலந்து பல இடைநிலை மொழிகளாக மாற்றங்களை தொடர்ந்து பெற்று கடைசியாக தற்போதுள்ள இந்தி, குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மராத்தி போன்ற வட இந்திய மொழிகளாக நிலைபெற்றன.

மேற்காணுமாறு ஆரிய மொழிக்கலப்பால் பாழாகாமல், இந்தியாவின் கடைக் கோடியில், தெற்குப் பகுதியில், பண்டையத் தமிழ் மொழி பாதுகாப்பாக, இருந்து வந்தது. ஆனால் இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து நீடிக்கவில்லை. () என்கின்ற குறில் உயிரும் () என்கின்ற குறில் உயிரும்  “ () “ () என்கின்ற உயிர் மெய் எழுத்துக்களும் தோன்றிவிட்ட காலக் கட்டத்தில், தெற்குப் பகுதியிலும் சாதுரியமான ஆரியர்களைக் கொண்டு பண்டைய தமிழ் மொழி மீது ஆரிய மொழி ஆதிக்கம் செலுத்தியதால் மொழிக்கலப்பு மிகுதியாக ஏற்பட்டு 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதுள்ள தெலுங்கு, கன்னடமும் 500 ஆண்டுகளுக்கு முன்பாக தற்போதுள்ள மலையாளமும் இலங்கையில் சிங்களமும் தோன்றி நிலைபெற்றன.

தற்போது ஆரியக் கலாசாரம் இந்தியாவில் இல்லை. தமிழ் கலாசாரம் (திராவிடக் கலாசாரம்) அல்லது பண்டையத் தமிழ் கலாசாரம் இந்து அல்லது சிந்து கலாசாரமாக வெளிக்காட்டப்படுகின்றது. அனைத்து வட இந்திய மொழிகளும், அனைத்து தென்னிந்திய மொழிகளும், இலங்கை சிங்கள மொழியும் தமிழ் மொழியில் உள்ள வாக்கிய அமைப்பையும் ஒரே வகை சொல் வரிசையையும் பெற்று இருப்பதால், இந்திய மொழிகளுக்கு மூலமுதல் மொழி  தமிழ் என்பதும் ஆரிய மொழி அல்ல என்பதும் கண்கூடாக உள்ளது. சமஸ்கிருதம் இந்திய எழுத்துருவைக் கொண்ட ஒரு செயற்கை மொழியாக இருப்பதால் இந்திய மொழிகள் எதற்கும் அது மூலமுதல் மொழியாக இருக்கவில்லை. அனைத்து இந்தியர்களும் திராவிடர்களே, அனைத்து இந்திய மொழிகளும் திராவிட மொழிகளே. அதனால், இந்தியா என்பது உண்மையான திராவிட நாடு என்றும் சிலர் கருதுவது போல வட ந்தியா ஆரிய நாடு அல்ல என்றும் உணரும் தருணம் இப்போது வந்துவிட்டது.

சென்ற நூற்றாண்டில், தமிழ் நாட்டிலும் தமிழ் மொழி ஏறக்குறைய அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது பேராசிரியர் கால்டுவெல் அவர்களின் ஆராய்ச்சியின் பயனாக சடுதியில் தன்னுணர்வு எற்பட்டது. தனித் தமிழ் நடை என்ற இயக்கத்தினை பரிதிமால் கலைஞரும் மறைமலை அடிகளும் துவக்கிவைத்தனர் திருவாளர் காமராஜர் அவர்கள் தமிழை பள்ளிகளில் பயிற்று மொழியாக அறிவித்தார். ஆங்கிலேயர் காலத்தில், தமிழ் மொழி புத்தாக்கம் பெற்றது

ஈ. ஒரு மொழி மீது மற்றொரு மொழியைத் திணிக்கும் அபாயம்:

ஆல்கிலம் படிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும், இந்திய அரசு இந்தி மொழியைத் திணிக்கும் நிலை இருப்பதாலும் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு பேரபாயம் உள்ளது. அதனால் வேரொரு மொழி அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் அல்லது இந்தி மற்ற இந்திய மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதை மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, அனைத்து மொழிகளைகளையும் வேறுபடுத்தாமல் சரிநிகர் சமமாகக் கருதவேண்டும். இதனை உறுதி செய்யும் நிலைமை இப்போது ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஏற்பட்டுள்ளது.  

வட இந்திய தென் இந்திய மக்கள் யாவரும் திராவிடர்கள் எனப்படும் பழந்தமிழ்கள் அல்லது பண்டைய தமிழர்கள் ஆவார்கள். இப்போது ஆரியர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. வட இந்தியர்கள் யாருக்கும் தாய்மொழியாக சமஸ்கிருத இல்லாத போதிலும் சமஸ்கிருத ஆதிக்கத்தினால் தாங்களே தங்களை ஆரியர்கள் என்று எண்ணும் நிலைமை இருந்து வருகின்றது. பழந்தமிழ் அல்லது பண்டைய தமிழ் தமிழ் மக்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் பழந்தமிழ் அல்லது பண்டைய தமிழ் நாகரிகத்தினை மறுத்தோ அல்லது மறைத்தோ ஆரிய நாகரிகத்தினை எப்போதும் போலியாக நிலைநிறுத்திக் கொண்டு இருக்க இயலாது. உண்மை ஒரு நாள் வெளிப்படும்.  

உ. மொழிகளின் எழுத்து மற்றும் ஒலிக்கட்டமைப்புகள்:

மற்ற மொழிகளைப் போன்று பல குறைபாடுகள் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. இருந்த போதிலும் இயற்கையான இரண்டு வடிவங்களை மட்டும் அதாவது உயிர் எழுத்துக்கள் (V-form) மற்றும் மெய்யெழுத்துக்கள் (C-Form) என்று நிலையான 26 எழுத்துக்களை  மட்டும் அடிபடையாகக் கொண்டதாக ஆங்கிலம் உலக மொழியாகத் திகழ்கின்றது..  

இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் சுமார் 10 பல்வேறு வரிவடிவங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் எழுத்துக்களை அடிப்படையாகக் கொள்ளாமல் எழுத்தொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் மொழியானது உயிர் எழுத்துக்கள் (V-form) மெய் எழுத்துக்கள் (C-Form), உயிர் மெய் எழுத்துக்கள் (CV-Form) ஆகிய மூன்று இயற்கையான அடிப்படை வரி வடிவங்களாக, தற்போது சுமார் 300 எழுத்துக்கள் இருக்கின்றன.

தமிழ் தவிர, மற்ற இந்திய மொழிகள், உயிர் எழுத்துக்கள் (V-form) மெய் எழுத்துக்கள் (C-Form), உயிர் மெய் எழுத்துக்கள் (CV-Form) ஆகிய மூன்று இயற்கையான அடிப்படை வரி வடிவங்களோடு, மெய்எழுத்துத் தொகுப்புயி்ர் கூட்டெழுத்துக்கள் (C+C+…..+V- form) என்கின்ற செயறகையான vms வடிவமாகவும் உள்ளன. ஒலிகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், காலம் செல்லச் செல்ல, புதிய ஒலிகளை சேர்க்கும் போது புதிய எழுத்துக்களை சேர்த்து, தற்போது 500 க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன. இந்தியைக் கற்பிக்க இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்த போதிலும், மிகவும் அதிகப்படியான எழுத்துக்கள் இருப்பதால் அவைகளை நினைவில் வைத்து இந்தியைக் சுலபமாக கற்க இயலாமல் மாணவர்களும் மக்களும் சிரமப்படுகின்றார்கள்.

ஊ. தேவநாகரி போன்ற எழுத்துருக்களில் தற்போதுள்ள தவிர்க்க இயலாத குறைபாடுகள்:

புதிய இந்திய ரூபாய்க்கான சின்னத்தினை அறிமுகப்படுத்தியதும் பல்வேறு தொலைக்காட்சி உரையாடல்களை கேட்டு பொதுமக்கள் தேவநாகரி எழுத்ததுருவை 75% இந்திய மொழிகள் பின்பற்றுவதை அறிந்து கொண்டார்கள். எனவே, ஒரு இந்தியா ஒரு எழுத்துரு என்ற அடிப்படையில் மீதமுள்ள 25% இந்திய மொழிகளும் தேவநாகரி எழுத்துருவை ஏன் அறிமுகப்படுத்தி 100% மாக ஆக்கிடக் கூடாது என்று எண்ணிட வாய்ப்புண்டு. ஆனால், கீழ்க்காணும் காரணங்களால், ஒரு இந்தியா ஒரு எழுத்துரு என்ற கொள்கைக்கு தேவநாகரி வரிவடிவம் பொருத்தமானது இல்லை.

1. இந்திய மொழிகள் ஒவ்வொன்றிற்கும் 500க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருப்பதால், மொழிகளை கற்பதற்கும் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மாணவர்களது சிரமம் அளவிடற்கரியதாய் உள்ளது.   
2. தேவநாகரி எழுத்துருவில் செயற்கையான வடிவில் அதாவது பலமெய்களோடு உயிர்வடிவம் (C+C+……+V - Form) கொண்ட ஏராளமான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன
3. தேவையில்லாமல் 4 உச்சரிப்புள்ள 1) க, 2) ச, 3) ட, 4) த, 5) ப ஆகிய 5 மெய் எழுத்துக்கள் உள்ளன. 4 உச்சரிப்புக்குப் பதிலாக, பெரும்பாலும் இரண்டு உச்சரிப்புகள் அதாவது 1) க, க1, 2) ச, ஜ, 3) ட, ட1 4) த, த1, 5) ப, ப1 போதுமானதாக உள்ளன. இரண்டாவதையும் நான்காவதையும் இரண்டிரண்டாக அதாவது 1) க், க்1ஃ, 2) ச்ஃ, ஜ்ஃ, 3) ட்ஃ, ட14) த்ஃ, த்1ஃ, 5) ப்ஃ, ப்1 என்று எழுதி உச்சரிக்கலாம்
4. தேவநாகரி எழுத்தினைப் பின்பற்றினால், எழுத்துக்களின் செயற்கை வடிவம் அதாவது பல மெய்எழுத்துகளுடன் உயிர் சேரும் வடிவம் (C+C+….+V- Form) தவிர்க்க இயலாததாக இருப்பதால் மாணவர்களின் சிரமம் குறையாமல் தொடருந்து இருந்து வரும்.
5. தமிழ் எழுத்துருவைத் தவிர தேவநாகரியைப் போன்ற வேறு எழுத்துருவைப் பின்பற்றினாலும் எழுத்துக்களின் செயற்கை வடிவம் அதாவது பல மெய்எழுத்துகளுடன் உயிர் சேரும் வடிவம் (C+C+….+V- Form) தவிர்க்க இயலாததாக இருப்பதால் மாணவர்களின் சிரமம் குறையாமல் தொடருந்து இருந்து வரும்.

எ. தமிழ் எழுத்துருவில் தற்போதுள்ள குறைபாடுகளை (shortcomings) அகற்றுதல்

பொது எழுத்துருவாக பின்பற்றுவதற்குத் தடையாக, தமிழ் எழுத்துருவில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. இவைகளைக் களைவதற்கு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 
1. தமிழ் எழுத்துருவில், ஜ (J)  என்ற உச்சரிப்புள்ள எழுத்து ஏற்கனவே இருப்பதால் நான்கு மெய் எழுத்துக்கள் இல்லாத குறைபாட்டினை அதாவது, 1) 1 (G), 2) 1 (D) 3) 1 (DH) 4) 1 (B), ஆகியவற்றை மட்டும் உருவாக்கி இக்குறையை நிவர்த்தி செய்யலாம். இந்த நான்கு எழுத்துக்களுக்கான புதிய வடிவத்தினை மொழிவல்லுனர்கள் ஏற்படுத்திக்கொள்ளலாம் (காண்க: பட்டியல்)  

2. ஒவ்வொரு எழுத்து வரிசையிலும் ஈருரு மூவுரு வடிவவுள்ள ஏழு உயிர்மெய் எழுத்துக்கள் இருப்பது மற்றொரு குறைபாடாக உள்ளது. இடது பக்கமும் வலது பக்கமும் உள்ள உயிர்க் குறிகளை மெய் எழுத்துகளுக்கு மேலாகவும் கீழாகவும் பொருத்தி, இந்தக் குறைபாட்டினை உடனடியாக நீக்கலாம். தற்போதுள்ள ஈருரு மூவுரு வடிவுள்ள உயிர்மெய் எழுத்துக்களுக்குப் பதிலாக ஓருரு வடிவ உயிர்மெய் எழுத்துக்களாக மாற்றிடுவதற்கான கருத்துருவை ஏற்கனவே பரிசீலனைக்காக, இந்திய அரசுக்கும் / தமிழ்நாடு அரசுக்கும், ஏற்கனவே, அனுப்பி வைத்துள்ளேன். (காண்க: திட்ட2)

ஏ. இந்திய மொழிகளை சீரமைக்க பொருத்தமான பொதுத் தமிழ் எழுத்துரு:

இந்த இரண்டு குறைபாடுகளை தமிழ் வரிவடிவத்தில் இருந்து நீக்கிய பிறகு, ஒரு இந்தியா ஒரு எழுத்துரு என்ற கோட்பாட்டிற்கு தமிழ் எழுத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனலாம். மேலும்,   39 முதன்மை எழுத்துக்களைக் கொண்டு 351 எழுத்துக்களாகக் குறைத்துக் கொள்ளலாம். அதனால், இந்திய மொழிகளைக் கற்கவும், படிக்கவும் எழுதவும் மாணவர்களின் சிரமம் வெகுவாகக் குறைந்துவிடும். பல மெய்களுடன் உயிர் சேரும் செயற்கையான வடிவம் (C+C+….+V- Form) தமிழ் வரிவடிவத்தில் இல்லை என்பதால், தற்போதுள்ள தேவையற்ற நூற்றுக்கணக்கான கூட்டு எழுத்து வடிவங்களை, இந்திய மொழிகளில், இல்லாமல் செய்துவிடலாம்.

தற்போதய தேவை, பொதுவான தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு இந்திய மொழிகளின் எழுத்துருக்களை சீரமைப்பதாகும். இதனை செயலாக்கத்திற்குக் கொண்டுவர 5 முதல் 10 ஆண்டு காலம் அவகாசம் தரலாம். அனைத்து மாநில மொழிகளையும் மத்திய அரசு மொழிகளாக அறிவித்திட இந்திய அரசு கருதுவதாக அறியப்படுகின்றது. எழுத்துக்களை சீரமைத்தபின்பு, ஒரு மென் பொருளை உருவாக்கி, தேவநாகரி எழுத்துக்களையும் அது போன்ற பிற எழுத்துக்களையும் இந்தந்த எழுத்துக்கு/எழுத்துக்களுக்கு இந்தந்த எழுத்து/எழுத்துக்கள் என்று வரையறுத்து தமிழ் எழுத்துக்களாக மாற்றிடவேண்டும். பொதுவான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு, இந்திய மொழிகளை கற்பதும், படிப்பதும் எழுதுவதும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.



3. பட்டியல் 
அதிகளவு 351 எழுத்துக்கள் மட்டுமே உள்ள தமிழ் பொது வரிவடிவம் (27X13=351)
(உதாரணம்: தேவநாகரி வரிவடிவத்திற்குப் பதிலாக)


1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
1


2
क्
का
कि
की
कु
कू
कॅ
के
कै
कॉ
को
कै

க்
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
3
ङ्
ङा
ङि
ङी
ङु
ङू
ङॅ
ङे
ङै
ङॉ
ङो
ङौ

ங்
ஙா
ஙி
ஙீ
ஙு
ஙூ
ஙெ
ஙே
ஙை
ஙொ
ஙோ
ஙௌ
4
च्
चा
चि
ची
चु
चू
चॅ
चे
चै
चॉ
चो
चौ

ச்
சா
சி
சீ
சு
சூ
செ
சே
சை
சொ
சோ
சௌ
5
ञ्
ञा
ञि
ञी
ञु
ञू
ञॅ
ञे
ञै
ञॉ
ञो
ञौ

ஞ்
ஞா
ஞி
ஞீ
ஞு
ஞூ
ஞெ
ஞே
ஞை
ஞொ
ஞோ
ஞௌ
6
ट्
टा
टि
टी
टु
टू
टॅ
टे
टै
टॉ
टो
टौ

ட்
டா
டி
டீ
டு
டூ
டெ
டே
டை
டொ
டோ
டௌ
7
ण्
णा
णि
णी
णु
णू
णॅ
णे
णै
णॉ
णो
णौ

ண்
ணா
ணி
ணீ
ணு
ணூ
ணெ
ணே
ணை
ணொ
ணோ
ணௌ
8
त्
ता
ति
ती
तु
तू
तॅ
ते
तै
तॉ
तो
तौ

த்
தா
தி
தீ
து
தூ
தெ
தே
தை
தொ
தோ
தௌ
9
न्
ना
नि
नी
नु
नू
नॅ
ने
नै
नॉ
नो
नौ

ந்
நா
நி
நீ
நு
நூ
நெ
நே
நை
நொ
நோ
நௌ
10
प्
पा
पि
पी
पु
पू
पॅ
पे
पै
पॉ
पो
पौ

ப்
பா
பி
பீ
பு
பூ
பெ
பே
பை
பொ
போ
பௌ
11
म्
मा
मि
मी
मु
मू
मॅ
मे
मै
मॉ
मो
मौ

ம்
மா
மி
மீ
மு
மூ
மெ
மே
மை
மொ
மோ
மௌ
12
य्
या
यि
यी
यु
यू
यॅ
ये
यै
यॉ
यो
यौ

ய்
யா
யி
யீ
யு
யூ
யெ
யே
யை
யொ
யோ
யௌ
13
र्
रा
रि
री
रु
रू
रॅ
रे
रै
रॉ
रो
रौ

ர்
ரா
ரி
ரீ
ரு
ரூ
ரெ
ரே
ரை
ரொ
ரோ
ரௌ
14
ल्
ला
लि
ली
लु
लू
लॅ
ले
लै
लॉ
लो
लौ

ல்
லா
லி
லீ
லு
லூ
லெ
லே
லை
லொ
லோ
லௌ
15
व्
वा
वि
वी
वु
वू
वॅ
वे
वै
वॉ
वो
वौ

வ்
வா
வி
வீ
வு
வூ
வெ
வே
வை
வொ
வோ
வௌ
16
ऴ्
ऴा
ऴि
ऴी
ऴु
ऴू
ऴॅ
ऴे
ऴै
ऴॉ
ऴो
ऴौ

ழ்
ழா
ழி
ழீ
ழு
ழூ
ழெ
ழே
ழை
ழொ
ழோ
ழௌ
17
ळ्
ळा
ळि
ळी
ळु
ळू
ळॅ
ळे
ळै
ळॉ
ळो
ळौ

ள்
ளா
ளி
ளீ
ளு
ளூ
ளெ
ளே
ளை
ளொ
ளோ
ளௌ
18
ऱ्
ऱा
ऱि
ऱी
ऱु
ऱू
ऱॅ
ऱे
ऱै
ऱॉ
ऱो
ऱौ

ற்
றா
றி
றீ
று
றூ
றெ
றே
றை
றொ
றோ
றௌ
19
ऩ्
ऩा
ऩि
ऩी
ऩु
ऩू
ऩॅ
ऩे
ऩै
ऩॉ
ऩो
ऩौ

ன்
னா
னி
னீ
னு
னூ
னெ
னே
னை
னொ
னோ
னௌ
20
स्
सा
सि
सी
सु
सू
सॅ
से
सै
सॉ
सो
सौ

ஸ்
ஸா
ஸி
ஸீ
ஸு
ஸூ
ஸெ
ஸே
ஸை
ஸொ
ஸோ
ஸௌ
21
ष्
षा
षि
षी
षु
षू
षॅ
षे
षै
षॉ
षो
षौ

ஷ்
ஷா
ஷி
ஷீ
ஷு
ஷூ
ஷெ
ஷே
ஷை
ஷொ
ஷோ
ஷௌ
22
ज्
जा
जि
जी
जु
जू
जॅ
जे
जै
जॉ
जो
जौ

ஜ்
ஜா
ஜி
ஜீ
ஜு
ஜூ
ஜெ
ஜே
ஜை
ஜொ
ஜோ
ஜௌ
23
ह्
हा
हि
ही
हु
हू
हॅ
हे
है
हॉ
हो
हौ

ஹ்
ஹா
ஹி
ஹீ
ஹு
ஹூ
ஹெ
ஹே
ஹை
ஹொ
ஹோ
ஹௌ
24
ग्
गा
गि
गी
गु
गू
गॅ
गे
गै
गॉ
गो
गौ

க்1
1
கா1
கி1
கீ1
கு1
கூ1
கெ1
கே1
கை1
கொ1
கோ1
கௌ1
25
ड्
डा
डि
डी
डु
डू
डॅ
डे
डै
डॉ
डो
डौ

ட்1
1
டா1
டி1
டீ1
டு1
டூ1
டெ1
டே1
டை1
டொ1
டோ1
டௌ1
26
द्
दा
दि
दी
दु
दू
दॅ
दे
दै
दॉ
दो
दौ

த்1
1
தா1
தி1
தீ1
து1
தூ1
தெ1
தே1
தை1
தொ1
தோ1
தௌ1
27
ब्
बा
बि
बी
बु
बू
बॅ
बे
बै
बॉ
बो
बौ

ப்1
1
பா1
பி1
பீ1
பு1
பூ1
பெ1
பே1
பை1
பொ1
போ1
பௌ1

குறிப்பு: 1) உயிர் எழுத்துக்கள் 12, 2) உயிர்மெய் எழுத்துக்கள் (18+4+4=) 26, ஆயுதம் 1, அடிப்படை எழுத்துக்கள் மொத்தம் 39, உயிர்மெய் எழுத்துக்கள் 312, ஆக மொத்தம் (26 + 12 + 1 + 312 = 351) (அ) (27X13 = 351) க்1 ட்1 த்1 ப்1 ஆகியவற்றில் மேலொட்டு எழுத்து (Superscript) அப்படியே இருக்கலாம் (அ) புதிய வரிவடிவம் கொடுக்கலாம். மேற்காணுமாறு எழுத்துக்களை சீர்மையாக்குவதன் மூலமாக, இந்தி முதலான இந்திய மொழிகளில் உள்ள 500, 600 க்கும் மேற்பட்ட எழுத்துக்களில் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் பெருமளவில் குறைந்து அதிகளவாக 351 எழுத்துக்களாகக் குறைந்துவிடுகின்ற. தமிழ் பொது வரிவத்தினைக் கொண்டு, இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள செயற்கையான கூட்டு எழுத்துக்களை எந்த வடிவிலும் இடம் பெறாமல் செய்துவிடலாம். தமிழ்நாடு அரசு / இந்திய அரசு ஒப்புதல் பெற்று பா1, பெ1, பே1, பை1, பொ1, போ1, மற்றும் பௌ1, போன்ற தமிழ் எழுத்து வரிசைகள் ஈருரு, மூவுருவாக இருப்பதை ஓருருவாக (திட்டம் 2 ல் உள்ளபடி) அமைத்திடலாம். தேவநகரி முதலிய எழுத்துக்களுக்குப் பதிலாக தமிழ் பொது வரிவடிவமாக உள்ள 351 எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  .

மொழியின் பெயர்
மொத்த எழுத்து எண்ணிக்கை
குறிப்பு
சமஸ்கிருதம்* உட்பட இந்தி முதலான வட இந்திய மொழிகளும், இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அது போன்ற மொழிகளும்
24x11= 264 மட்டும் தேவை
எ, ஒ, ற, ன, ழ, அம், அஹ, க்ரு, க்லு, முலியன தேவை இல்லை.   
தமிழ் தவிர தென்னிந்திய மொழிகள்
27x13 = 351 தேவை
அம், அஹ, க்ரு, க்லு, முலியன தேவை இல்லை.   
தமிழ் மொழி
23x13 = 299 தேவை
1, ட1, த1, ப1 தேவை இல்லை
* சமஸ்கிருத பண்டிதர்கள் ஏற்றுக்கொள்ளும் போது. 

திட்டம் 2
ஈருரு மற்றும் மூவுருவாக உள்ள மற்றும் சீர்மையற்ற தமிழ் எழுத்துக்களையும் ஓருருவாகவும் குறியீடு பெற்று ஈருருவாக உயிர் எழுத்துக்களையும் சீர்திருத்தம் செய்வதற்கான கருத்துரு.

நவீனத் தமிழில் மெய்யெழுத்துக்கள் 18 மற்றும் சார்பு மெய்யெழுத்துக்கள் 5 மொத்த மெய்யெழுத்துக்கள் (18+5=) 23; உயிரெழுத்துக்கள் 12; மற்றும் சிறப்பு  எழுத்து 1, கூட்டு எழுத்து 1 என்று முதன்மை எழுத்துக்கள் 37. உயிர்மெய் எழுத்துக்கள் (23x12=) 276; மொத்தம் வழக்கில் உள்ள நவீன தமிழ் எழுத்துக்கள் (37+276=) 313. இதில், தமிழ் இயல்புக்கு ஒத்ததாக உள்ள ஸ, ஷ, ஜ, ஹ ஆகிய 4 சார்பு மெய் எழுத்துக்கள், சார்பு உயிர்மெய் எழுத்துக்கள் 48 ஆகிய (4+48=) 52 சார்பு எழுத்துக்களும் கொடுந்தமிழாக உள்ள மெய் எழுத்து க்ஷ - வும், க்ஷ வரிசையில் உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் 12 ம், கூட்டு எழுத்து ஸ்ரீ ம் ஆக மொத்தம் (1+12+1=) 14 எழுத்துக்களும் அடங்கியுள்ளன.  கொடுந்தமிழாக உள்ள 14 எழுத்துக்களைக் கணக்கில் கொள்ளாவிட்டால் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் 299 ஆகும்.   

அ, இ, ஈ ஆகிய 3 உயிர்கள் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஓருருவாக மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. உ, ஊ ஆகிய 2 உயிர்கள் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஓருருவாக இருந்த போதிலும் ஒரே சீராக அமையவில்லை. ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 7 உயிர்கள் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஈருருவாகவும் மூவுருவாகவும் அமைந்துள்ளன. ஊகார ஔகார உயிர் எழுத்துக்கள் தேவையில்லாமல் குறியீடு பெற்று ஈருருவாக அமைந்து உள்ளன. ஈருருவாகவும் மூவுருவாகவும் இருப்பதால்  மாணவர்கள் தேர்வு எழுதும் போது, கை வலிக்கும்படியாக மிகவும் சிரம்பப்பட்டு எழுதிட வேண்டியுள்ளது. அனைத்து எழுத்துக்களும் ஓருருவாக இருந்தால் மாணவர்களின் எழுதும் சிரமமும் எழுதும் பக்கங்களும் பெரும் அளவிற்குக் (பாதிக்கும் மேலாக) குறையும். இதனால் பொருட்செலவும் உழைப்பும் வெகுவாகக் குறையும்

உயிர்க் குறியீடுகள் எழுத்துக்கு இடப்பக்கம் அமைத்திருப்பதும், இடப்பக்கம் மற்றும் வலப்பக்கம் ஒரு சேர அமைத்திருப்பதும், பெருங்குறைபாடு என்று மதிப்பிற்குரிய அமரர் முனைவர் மு.வரதராசனார் அவர்கள் தமது மொழி வரலாறு எனும் நூலில் (காண்க : பக்கம் 379 நகல் இணைக்கப்பட்டுள்ளது)  அதற்கான காரணங்களை விளக்கிக் கூறி இருக்கின்றார். எனவே, ஈருரு மூவுருவாக உள்ள அனைத்து எழுத்துக்களையும், ஓருருவாக அமைப்பதுவே அடுத்துச் செய்ய வேண்டிய தமிழ்த் தொண்டாக இருக்க வேண்டும்.


.அ. சீர்திருத்தம் தேவைப்படும் எழுத்துக்கள்

மூவுருவாக உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் (22X3=) 66,
ஈருருவாக உள்ள உயிர்மெய் எழுத்துக்கள் (22X4=) 88,
குறியீடு உள்ள உயிர் எழுத்துக்கள் –(1X2 =) 2
ஓருருவாக இருந்தும் சீரில்லாத உயிர்மெய் எழுத்துக்கள் (22X2=) 44,

ஆக மொத்தம் (66+88+2+44 =) 200 எழுத்துக்களுக்கு சீர்திருத்தம்  தேவைப்படுகிறது. தேவையான இந்த மாற்றத்தைத் தற்போதுள்ள கால், கொக்கி, கொம்புகளையே சிறிது திருத்தம் செய்து முதன்மை எழுத்துருவுக்கு மேல்பக்கமும் கீழ்பக்கமும் கீழ்க்காணுமாறு இணைத்து அமைத்துக் கொண்டால் உயிர்மெய் எழுத்துக்கள் ஒரே சீராகவும் ஓருருவாகவும் அமைகின்றன.

 உயிர்க் குறியீட்டினை மெய்யெழுத்துக்கு மேலே இணைத்தல்

(1)  ஆகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு - பிறை (crescent)  
(2) உகரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு - கொக்கி (hook) இடமாக திசையாக்கம் (left orientation) ) (இகர மெய்யுடன் சேருவதற்கு கொக்கி (hook) வலமாக திசையாக்கம் (right orientation) பெற்றிருப்பது போன்று.
(3)  ஊகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு - ஒரு சுழிகொம்பு (horn with one circle) இடமாக திசையாக்கம் (left orientation) (ஈகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு ஒரு சுழிகொம்பு (horn with one circle) வலமாக திசையாக்கம் (right orientation) பெற்றிருப்பது போன்று
4) எகரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு  ஒரு சுழிகொம்பு horn with one circle) மேற்பக்கம் திசையாக்கம் (upside orientation)
(5)  ஏகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு இரு சுழிகொம்பு horn with two circles) மேற்பக்கம் திசையாக்கம் (upside orientation)
6) ஒகரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு - இரு சுழிகொம்பு horn with two circles) வலமாக திசையாக்கம் (right orientation)
(7)  ஓகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு இரு சுழிகொம்பு horn with two circles) இடமாக திசையாக்கம் (left orientation)

இ. உயிர்க் குறியீட்டினை மெய்யெழுத்துக்குக் கீழே இணைத்தல்

(8) ஐகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்குக் - ஒரு சுழிகொம்பு (horn with one circle) கீழ்ப்பக்கம் திசையாக்கம் (down side orientation)
(9) ஔகாரம் மெய்யெழுத்துடன் சேருவதற்கு - இரு சுழிகொம்பு (horn with two circles) கீழ்ப்பக்கம் திசையாக்கம் (down side orientation)

ஈ. குறியீட்டினை கைவிட்டு, உயிரெழுத்து வடிவத்தினை திருத்தி அமைத்தல்

(10) ஊகார உயிர்க்கு, உகரத்தில் கீழ் நோக்கிய ஒரு சாய்வுக் கோடு  (ஏகாரத்திற்கு இடுவது போன்று)
(11) ஔகார உயிர்க்கு, ஓகாரத்தில் கீழ் உள்ள சுழி மீது மறுபடியும் ஒரு சுழி
உ. உயிர்க் குறியீடுகள்

அ. தற்போதுள்ள மொத்தக் உயிர்க் குறியீடுகள் - 19
ஆ. கைவிடப்பட்ட குறியீடுகள் 16, (1) கால், (2) இடது பக்கமுள்ள ஒரு சுழிக் கொம்பு, (3) இடதுபக்கமுள்ள இரு சுழிக் கொம்பு, (4) எனும் குறியீடு, (5) ஐகாரத்திற்கான குறியீடு ஆகிய 5 ம், உகரத்திற்கான உயிர்க்குறியீடுகள் 5 - ம் ஊகாரத்திற்கான உயிர்க்குறியீடுகள் 6 ம் ஆக மொத்தம் - 16  
இ. பயன்படுத்தும் குறியீடுகள் 5. (1) புள்ளி (point), (2) பிறை(crescent),  (3) கொக்கி -  (hook), (4) ஒரு சுழிகொம்பு (horn with one circle). (5) இரு சுழிகொம்பு (horn with two circles).
இந்த 5 குறியீடுகளில், புள்ளி (point), பிறை (crescent), ஆகியவை தவிர மற்ற 3 குறியீடுகளை அதாவது (1) கொக்கி (hook), (2) ஒரு சுழிக் கொம்பு(horn with one circle), (3) இரு சுழிக் கொம்பு(horn with two circles) ஆகியவற்றைச் திசையாக்கம் (orientation) செய்து கீழ்க்காணுமாறு மொத்தம் 12 குறியீடுகள் (அட்டவணை 3) பயன்படுத்தப்பட்டுள்ளன
ஆகார உயிருக்கு, பிறை ( (crescent) (1),
இகர உகர உயிர்களுக்கு வலம், இடமாக 2 திசையாக்கம் (2 times orientation as right and left) கொக்கியும் (hook) (2 & 4),  
ஈகார, ஊகார, எகர ஐகார உயிர்களுக்கு, வலம், இடம், மேல் கீழென  4 திசையாக்கம் (4 times orientation as right, left, upside and down side) ஒரு சுழிகொம்பும் (horn with one circle) (3, 5, 6 & 8),
ஏகார, ஒகர, ஓகார, ஔகார உயிர்களுக்கு, வலம், இடம், மேல் கீழென  4 திசையாக்கம் (4 times orientation as right, left, upside and down side) இரு சுழிகொம்பும் (horn with two circles) (7, 9, 10 & 11), 
மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் (point) (12),  என்று மொத்தம் 12 உயிர்க் குறியீடுகள் உள்ளன
தற்போதுள்ள எழுத்துக்களுடன் உயிர்மெய் / உயிர் எழுத்துக்களை மேற்கூறியவாறு200 எழுத்துக்கள் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன  

ஊ. மொழி வரலாறு எனும் தூல் பக்கம் 379 ன் பகுதி நகல்

மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலிக்கும். இது ஒலிவடிவிற்கு ஆகும். ஆனால் வரிவடிவில் பல எழுத்துக்கள் அவ்வாறு (மெய் முன்னும் உயிர் பின்னுமாக) அமையவல்லை. கெ என்பதை எழுதும் போது,   ஒரு சுழிக் கொம்பு என்பதை முன் எழுதுவது தவறன்றோ?     த - க்குப் பின் ஐ - யின் குறியீடு என்று எழுதின் தகர மெய்யும் ஐகார உயிரும் கூடிய உயிர்மெய் என்பது தெளிவாகும் என்ற ஒலியை அதன் குறியை தை என்று மெய்க்கு முன் எழுதுவது பொருந்துமாறு எங்ஙன்? கொ, கோ, கௌ முலான எழுத்துக்களில் மெய்யை இடையில் வைத்து, உயிரின் வடிவை முன்னும் பின்னுமாகப் பிரித்து எழுதுதல் பெருங்குறையாகும்.





No comments:

Post a Comment